2011-06-29 15:38:35

உலகில் கால்நடைகளைத் தாக்கிய தொற்று நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஐ.நா.அறிவிப்பு


ஜூன்29,2011. இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்புக்குக் காரணமான நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் இச்செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது, பெரியம்மைக்குப் பிறகு உலகில் ஒழிக்கப்பட்ட இரண்டாவது நோய் என்றும் முதல் கால்நடை நோய் என்றும் FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
உலகில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக 1979ம் ஆண்டு டிசம்பரில் ஒரு முக்கிய அறிவியலாளர் குழு சான்றிதழ் வழங்கியது. இதனை உலக நலவாழ்வு நிறுவனம் 1980ல் அங்கீகரித்தது.







All the contents on this site are copyrighted ©.