கேரளாவின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள்
நீக்கப்பட பரிந்துரை
ஜூன் 28, 2011. கேரள மாநிலத்தின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்
திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்படவேண்டும் என அது குறித்து ஆய்வு செய்த வல்லுனர்
குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட இருவர்
அடங்கிய குழு, பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் சில பகுதிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக
இருப்பதாகவும், அப்பகுதிகள் நீக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைச் செய்துள்ளது