2011-06-28 16:30:34

இஸ்பெயின் இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கானத் திருத்தந்தையின் பயணத்திட்டம்


ஜூன் 28, 2011. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் உலக இளையோர் தினத்தில் பங்குகொள்ளச் செல்லும் திருத்தந்தை, இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 முதல் 21 வரை மத்ரித் நகர் செல்லும் திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், இளைஞர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தல், அவர்களுடனானச் சிலுவைப்பாதைக்குத் தலைமை தாங்குதல், அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்குதல், இரவு திருவிழிப்புச் செப வழிபாட்டில் கலந்துகொள்ளல், சர்வதேச இளையோருக்கான திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை இடம்பெற உள்ளன. இச்சந்திப்பின்போது திருத்தந்தை, இஸ்பெயின் நாட்டு ஆயர்கள், அந்நாட்டு மன்னர், பிரதமர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடுவார் எனவும் அவரின் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.