இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவத் திருநிலப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்
ஜூன் 28, 2011. ஜூன்29, இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டு நினைவைச்
சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்த நாளை பெரும் கொண்டாட்டங்களில்
செலவிடாமல், நன்றியறிவிப்பிற்கான நாளாகவும், தேவ அழைத்தலுக்கான செப நாளாகவும் சிறப்பிக்கத்
திருத்தந்தை விரும்புவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குருக்களுக்கான செப நாளாக
இந்நாளைச் சிறப்பிக்க அகில உலக திருச்சபையும் முடிவெடுத்துள்ள வேளை, 60 மணி நேர திருநற்கருணை
ஆராதனைக்கும் அழைப்பு விடுத்துள்ளது குருக்களுக்கான திருப்பேராயம். செபம் மற்றும்
ஐக்கியத்தின் மூலம் திருத்தந்தைக்கு இந்நாளில் நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கமுடியும்
என அத்திருப்பேராயம் மேலும் தெரிவித்துள்ளது