53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக கத்தோலிக்க அருட்சகோதரி கௌரவிக்கப்பட்டுள்ளார்
ஜூன் 28, 2011. கடந்த 29 ஆண்டுகளில் 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக ஹாங்காங் கத்தோலிக்க
அருட்சகோதரி ஒருவரை கௌரவித்துள்ளது செஞ்சிலுவைச் சங்கம். திரு இரத்த சபையைச் சேர்ந்த
அருட்சகோதரி Anna Chinன் இந்த அரிய சேவைக்காக அவரைக் கௌரவிப்பதாக அறிவித்தது செஞ்சிலுவைச்
சங்கம். 25 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்த 1600 பேர் ஹாங்காங்கில் செஞ்சிலுவைச்சங்கத்தால்
கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அருட்சகோதரி 53 முறைகள் இரத்ததானம் செய்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது