தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்கிறார்
திருத்தந்தை
ஜூன் 27, 2011. மேற்கத்திய நாடுகள் மூழ்கிப்போயிருக்கும் மற்றும் உலகம் முழுமையும்
பரவிப்போயிருக்கும் தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே
என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருச்சபை எனும் மறையுடலுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் திருநற்கருணையே என இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை,
திருநற்கருணையின்றி திருச்சபையால் உயிர் வாழமுடியாது என்றார். திருநற்கருணை எனும்
இந்த அருட்சாதனமே மனிதகுல ஐக்கியத்தைக் கொணர்கிறது ஏனெனில், இறைவனை உலகிற்கு கொணரவும்
உலகை இறைவனிடம் கொணரவும் இதனாலே முடியும் என்றார். தனியுரிமைக்கோட்பாட்டால் மூழ்கிப்போயிருக்கும்
மேற்கத்திய நாடுகளுக்கும், அதன் பாதிப்பை அனுபவித்து வரும் உலகிற்கும் எதிர்மருந்தாகச்
செயல்படும் திருநற்கருணை, ஐக்கியம், சேவை, பகிர்தல் போன்றவைகளை வழங்குகிறது என மேலும்
கூறினார் திருத்தந்தை.