2011-06-25 15:40:19

இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவர அரசியல்வாதிகள் அச்சம், குறைகூறுகிறது ஒரு நிருபர் குழு


ஜூன்25,2011. இலங்கையில் தகவல் அறியும் உரிமை மசோதா கொண்டுவரப்படுவதற்கு அரசியல்வாதிகள் அச்சம் அடைந்தாலும் அது கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்று CRCMO என்ற குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஊடக நிறுவனம் அறிவித்தது.
தெற்கு ஆசியாவில், தகவல் அறியும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படாத ஒரே நாடு இலங்கை என்று குறிப்பிட்ட அந்நிறுவனம், உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே இச்சட்டம் அமலில் இருக்கின்றது என்றும் கூறியது.
எல்லா அரசு நிறுவனங்களும் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளன என்பதை உணர்த்தும் ஓர் அரசியல் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்தில், இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி விழிப்புணர்வு நாளைக் கடைபிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக CRCMO நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்கிடையே, இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சியால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இம்மசோதா குறித்து இடம் பெற்ற வாக்கெடுப்பில் அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.