2011-06-24 15:33:32

உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்குக் கத்தோலிக்க இளையோர் உறுதி


ஜூன்24,2011. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்குத் தாங்கள் முயற்சிக்கவிருப்பதாக அனைத்துலக கத்தோலிக்க இளையோர் உறுதி எடுத்துள்ளனர்.
புதுடெல்லியில் நடைபெற்ற 14வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் கலந்து கொண்ட இளையோர், உலகின் தற்போதைய மனித, பொருளாதார மற்றும் விசுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பரிசீலனை செய்தனர்.
அதேசமயம், தங்களுடைய முயற்சிகளுக்கு அரசுகளும் பொதுமக்கள் சமுதாயமும் உதவுமாறும் வேண்டுகோள்விடுத்தனர்.
இம்மாநாட்டில் ஏறக்குறைய 37 நாடுகளிலிருந்து சுமார் 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.