2011-06-23 14:17:14

பாலஸ்தீன நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் லண்டனில் கல்விப் பயணம்


ஜூன் 23,2011. பாலஸ்தீன நாட்டிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் லண்டனுக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாலஸ்தீன நாட்டில் இஸ்ரேல் இராணுவத்தால் வீடுகளை இழந்து, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல மாணவர்கள் இந்த கல்விப் பயணத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
வருகிற சனிக்கிழமை நிறைவு பெறும் இந்தப் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள Camden என்ற நகரும், எருசலேமுக்கு அருகே உள்ள Abu Dis என்ற நகரும் சேர்ந்து நடத்துகின்றன.
லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிடுதல், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியரோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் இந்தப் பயணத்தின்போது இடம் பெற்றன.
வெவ்வேறு கலாச்சாரங்களில் இருந்தும், வெவ்வேறு சூழல்களில் இருந்தும் இளையோர் இவ்விதம் சந்திப்பது, வாழ்வைப் பற்றிய கல்வியைக் கற்பதற்கு இரு தரப்பினருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் Nandita Dawson கூறினார்.
பாதுகாப்பு அதிகம் இன்றி வாழும் இச்சிறுவர்களும், சிறுமியரும் நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்க இந்தப் பயணம் அவர்களுக்கு உதவும் என்று தான் நம்புவதாகவும் Dawson மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.