கீழை ரீதி திருச்சபைகளுக்கான உதவிப்பணிகளின் கூட்டம்
ஜூன் 21, 2011. கீழை ரீதி திருச்சபைகளுக்கான உதவிப்பணிகளின் 84வது அவைக் கூட்டம் இச்செவ்வாய்
முதல் வெள்ளி வரை வத்திக்கானில் இடம்பெற்று வருகின்றது. காப்டிக் கத்தோலிக்க சபையின்
முதுபெரும் தலைவர் கர்தினால் அந்தோனியோஸ் நகுய்ப், மாரனைட் கிறிஸ்தவ சபையின் புதிய முதுபெரும்
தலைவர் பெக்காரா பூத்ரோஸ் ராய், யெருசலேமிற்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் அந்தோனியோ
ஃப்ராங்கோ, புனித பூமிக்கான பொறுப்பாளர் பிரான்சிஸ்கன் சபை குரு பியர்பத்திஸ்தா பிட்ஸாபாலா
ஆகியோர் உட்பட முக்கிய திருச்சபைத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மத்தியக்கிழக்கு
நாடுகளில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை, அவர்களுக்கான உதவிகளை ஏற்று நடத்துதல், அமைதிக்கான
மதங்களின் மற்றும் கிறிஸ்தவ சபைகளின் அர்ப்பணம், புனித பூமியின் இன்றைய நிலை ஆகியவை குறித்து
இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.