ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள 20000க்கும்
மேற்பட்ட குருக்கள் வருகை
ஜூன் 21,2011. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டு மத்ரித் நகரில் நடைபெற விருக்கும்
அகில உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள 20000க்கும் மேற்பட்ட குருக்கள் எதிர்பார்க்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவார்த்தையிலும், திருப்பலியிலும் இளையோரை வழிநடத்தும் அற்புதமான
ஒரு வாய்ப்பையும் சவாலையும் குருக்கள் ஏற்று இம்மாநாட்டிற்கு வருகை தருவது திருச்சபையின்
எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று மத்ரித் உயர்மறைமாவட்டப் பேராயர்
கர்தினால் Antonio Maria Rouco கூறினார். ஆகஸ்ட் 16 முதல் 21 வரை திருத்தந்தையின்
தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து ஆயர்களும் குருக்களும்
தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என்று கர்தினால் Rouco மேலும் கூறினார்.