2011-06-20 16:19:07

திருத்தந்தை : அகதிகள் ஒவ்வொருவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும்


ஜூன் 20, 2011. அகதிகள் ஒவ்வொருவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 20ந்தேதி உலக அகதிகள் தினம் சிறப்பிக்கப்படுவதை, தன் ஞாயிறு மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அகதிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இயலும் சூழல் உருவாகும் வரை அவர்களை வரவேற்று, அவர்கள் மாண்புடன் வாழ்வதற்கான சூழல்களை உருவாக்கித் தரவேண்டியது நல்மனம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை என்றார்.
தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தின் 60ம் ஆண்டு இந்நாளில் கொண்டாடப்படுவதையும் சான் மரினோவில் தான் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.