இலங்கையில் காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளில் உதவ தலத்திருச்சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது
ஜூன் 20, 2011. உள்நாட்டுப்போர் முடிவடைந்துள்ள இலங்கையில், காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளில்
உதவ தலத்திருச்சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றார் அந்நாட்டின் கொழும்புப் பேராயர்
கர்தினால் மால்கம் இரஞ்சித். சிங்களவர் மற்றும் தமிழரிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டியது
கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய கடமையாகிறது, ஏனெனில் இரு தரப்பினரிடையேயும் கத்தோலிக்கர்கள்
உள்ளனர் என்றார் அவர். சாட்சியம் என்பது வார்த்தைகள் மூலம் அல்ல, மாறாக, செயல்பாடுகள்
வழி இருக்க வேண்டும் எனக் கூறிய கர்தினால் இரஞ்சித், மடுமாதா திருத்தலத்தில் இரு இனத்தவரும்
கூடி வந்து செபிப்பது, இரு இனத்தவரும் இணைந்து வாழ முடியும் என்பதன் அடையாளமாக உள்ளது
என மேலும் கூறினார்.