தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிற்குத் திருப்பீடத்தூதர் நியமனம்
ஜூன் 18,2011. ASEAN எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் திருப்பீடப்பிரதிநிதியாக
பேராயார் லியோபோல்தோ ஜிரெல்லியை இச்சனிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பேராயர் ஜிரெல்லி, ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் கிழக்கு திமோருக்கானத் திருப்பீடத்
தூதராகவும், மலேசியா மற்றும் புருனேக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும், வியட்நாமிற்குள்ளேயே
வாழாமல் அந்நாட்டிற்கான பாப்பிறைப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.