ஜூன் 18,2011. Ujjain சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மார் ஜான் பெருமட்டம்
இச்சனிக்கிழமைக் காலை இறைபதம் சேர்ந்தார். மறைந்த ஆயர் பெருமட்டம், 1921ம் ஆண்டு கேராளாவின்
பாளை மறைமாவட்ட கக்கூர் எனுமிடத்தில் பிறந்து 1951ன் குருவாகவும் 1977ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1998ம் ஆண்டு Ujjain மறைமாவட்ட ஆயர் பணிகளிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். ஆயர் பெருமட்டம்
அவர்களின் அடக்கச் சடங்கு வரும் செவ்வாயன்று Ujjain பேராலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.