San Marino குடியரசிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்
ஜூன் 18,2011. இத்தாலி நாட்டிற்குள் தனி நாடாக இருக்கும் San Marino குடியரசிற்கு இஞ்ஞாயிறன்று
திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். San Marino நாட்டிற்குத்
திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று காலை இத்தாலிய நேரம் 8 மணிக்கு,
அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்று, முதலில் San Marinoவின்
Serravalle திடலில் மக்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார். அங்கு அரசியல் தலைவர்களைச்
சந்தித்து உரையாடியபின், மாலையில் San Marino-Montefeltro மறைமாவட்ட இளைஞர்களைச் சந்தித்து,
அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்குவார் பாப்பிறை. 61 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட
San Marinoவின் மக்கள் தொகை 30,000 ஆகும். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்கரே.