2011-06-16 13:48:25

படகுகளில் பாதுகாப்பற்ற பயணம் செய்து உயிரிழந்தோரின் நினைவாக உரோம் நகரில் திருவிழிப்பு செபவழிபாடு


ஜூன் 16,2011. அரசியல் மற்றும் பிற காரணங்களால் பிறந்த நாட்டை விட்டு கடல் வழியே படகுகளில் பாதுகாப்பற்ற பயணம் செய்து உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் நினைவாக இவ்வியாழனன்று உரோம் நகர் தூய மரியா பேராலயத்தில் திருவிழிப்பு செபவழிபாடு நடைபெற்றது.
ஜூன் 20, வருகிற திங்களன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் நாளையொட்டி, இந்தத் திருவிழிப்பு வழிபாட்டினை திருப்பீடத்தின் குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மேய்ப்புப் பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Veglio முன்னின்று நடத்தினார்.
1990ம் ஆண்டு முதல், தகுந்த பாதுகாப்பின்றி படகுகளில் ஐரோப்பியக் கரைகளை அடைய முயன்ற 17597 பேர் கடலில் உயிரிழந்துள்ளனர் என்றும், லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெறும் கலவரங்களால் படகுகளில் தப்பித்துச் சென்றவர்களில் இந்த ஆணடின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 1820 பேர் கடலில் பலியாகியுள்ளனர் என்றும் FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.