தமிழகத்தின் ஏழு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஜூன் 16,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து
உரோம் நகர் வந்துள்ள ஏழு ஆயர்களை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில்
சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வியாழன் காலை பாளையங்கோட்டை ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ்,
சிவகங்கை ஆயர் ஜெபமாலை சூசைமாணிக்கம், திருச்சி ஆயர் அன்டனி டிவோட்டா, தூத்துக்குடி ஆயர்
யுவான் அம்புரோஸ், தருமபுரி ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ், கும்பகோணம் ஆயர் அன்டனிசாமி
பிரான்சிஸ், சேலம் ஆயர் சிங்கராயன் செபஸ்டியானப்பன் ஆகியோரைக் ஒரு குழுவாகச் சந்தித்து,
அவர்கள் ஒவ்வொருவருடனும் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.