சூடானில் உள்நாட்டுப் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
- அந்நாட்டு ஆயர்
ஜூன் 16,2011. சூடானில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக முயற்சிகள்
மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜூலை
மாதத் துவக்கத்தில் சூடான் நாடு வடக்கு மற்றும் தெற்கு என்று இரு நாடுகளாகப் பிரிய உள்ள
வேளையில், இப்பிரிவு சுமுகமாக நடைபெறுவதை விரும்பாத அமைப்புக்களால் கடந்த சில வாரங்களாக
அந்நாட்டில் நடைபெற்று வரும் மோதல்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன என்றும், இந்த மோதல்களால்
60,000க்கும் அதிகமான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் El Obeid என்ற
மறைமாவட்டத்தின் துணை ஆயர் Michael Didi Adgum Mamgoria கூறினார். தற்போது நடைபெறும்
கலவரங்கள் விரைவில் ஒரு போராக மாறி, பல ஆயிரம் உயிர்களைப் பழிவாங்கும் நிலை ஏற்படும்
என்று அப்பகுதியில் பணி புரிந்து வரும் காரித்தாஸ் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.