ஜூன் 16,2011. ஷில்லாங் 'ஓரியன்ஸ் இறையியல் கல்லூரி'யின் முதல்வராய் இருக்கும் அருள்தந்தை
ஜேம்ஸ் தோப்பிலை இந்தியாவின் கோஹிமா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இவ்வியாழனன்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் நியமித்தார். கோஹிமா மறைமாவட்டக் குரு ஜேம்ஸ் தோப்பில், 1959ம் ஆண்டு
கேரளாவின் கோட்டயத்தில் பிறந்தார். உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில்
இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 2007ம் ஆண்டு முதல் ஷில்லாங் ஓரியன்ஸ் இறையியல்
கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார். குரு தோப்பில் புதிய ஆயராக பொறுப்பேற்க
உள்ள கோஹிமா மறைமாவட்டத்தின் 21 இலட்சத்து 54 ஆயிரம் மக்கள் தொகையில் 57 ஆயிரத்து 549
பேர் கத்தோலிக்கர். இம்மறைமாவட்டத்தில் 84 மறைமாவட்டக் குருக்களும், 72 துறவுசபைக் குருக்களும்,
324 பெண் துறவியரும் பணியாற்றுகின்றனர்.