2011-06-15 16:18:14

வர்த்தக உலகில் நன்னெறி என்ற மையக்கருத்தில் வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு


ஜூன் 15,2011. இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் ‘வர்த்தக உலகில் நன்னெறி’ என்ற மையக்கருத்தில் வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே துவக்க உரையாற்றி, ஆரம்பித்து வைக்கிறார்.
இக்கருத்தரங்கின் அமைப்பாளரும் திருப்பீடத்தின் அமைதி மற்றும் நீதிப் பணிக்குழுவின் தலைவருமான கர்தினால் பீட்டர் டர்க்சன், மற்றும் கர்தினால் வெலாசியோ தெ பவோலிஸ் ஆகியோரும் ஆரம்ப அமர்வில் உரையாற்றுகின்றனர்.
இரு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் பெரும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உரோமைக்கு வந்துள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியுட்டுள்ள 'Caritas in Veritate' என்ற சுற்று மடலைச் சார்ந்து விவாதங்கள் நடைபெற உள்ளன.
அண்மைப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவந்துள்ள வர்த்தக உலகம் சந்திக்கவிருக்கும் சவால்களும், இச்சவால்களை நன்னெறி முறையில் சந்திப்பதற்கான வழிகளும் இக்கருத்தங்கின் விவாதங்களில் இடம்பெற உள்ளன.








All the contents on this site are copyrighted ©.