2011-06-14 15:49:41

சிறார்கள் பாலின முறைகேட்டிற்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஆசிய ஆயர்கள் நவம்பரில் விவாதிக்க உள்ளனர்


ஜூன் 14,2011. குருக்களால் பாலின முறைகேட்டிற்கு சிறார்கள் உள்ளாக்கப்பட்டது குறித்து உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தொடர்ந்து, ஆசிய திருச்சபைத் தலைவர்களும் இது குறித்து கூடி விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலின நடவடிக்கை விவகாரம் குறித்து அனைத்து ஆயர்களும் விவாதித்து, வரும் ஆண்டு மே மாதத்திற்குள் வழிகாட்டுதல் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான FABC வரும் நவம்பர் 14 முதல் 19 வரை பாங்காக்கில் கூடி விவாதிக்க உள்ளது.








All the contents on this site are copyrighted ©.