2011-06-14 15:50:49

ஈராக்கில் கடத்திச் செல்லப்பட்ட கிறிஸ்தவ இளைஞனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது


ஜூன் 14,2011. கடந்த வாரம் ஈராக்கில் கடத்திச் செல்லப்பட்ட 29 வயது கிறிஸ்தவ இளைஞனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் இத்திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்தவ இளைஞர் Ashur Yacob Issa கடந்த வார இறுதியில் கடத்திச் செல்லப்பட்டு, கடத்தல்காரர்களால் 70 ஆயிரம் டாலர் பிணையத் தொகை கேட்கப்பட்டது. அவரது குடும்பம் அவ்வளவு பெரியத் தொகையைக் கொடுக்க முடியாத நிலையில், Issaவின் தலை வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கிறிஸ்தவ இளைஞரின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஈராக் பேராயர் Luis Sako, எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும், ஈராக் நாட்டில் தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் யாரும் இஸ்லாமிய மறைக்கு மாறியதில்லை என்பது அந்நாட்டில் நிலவும் கத்தோலிக்க விசுவாசத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என்றார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கைக்காக கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








All the contents on this site are copyrighted ©.