2011-06-10 14:42:25

ஓவியர் M F Hussain மரணம் குறித்து இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் அனுதாபங்கள்


ஜூன் 10,2011. இவ்வியாழன் அதிகாலையில் இலண்டன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் புகழ்பெற்ற ஓவியர் M F Hussain மரணமடைந்ததைக் குறித்து இந்திய கத்தோலிக்கத் திருச்சபையும், இன்னும் பிற ஓவியர்களும் தங்கள் அதிர்ச்சியையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிறந்து, தன் ஓவியங்களால் உலகப் புகழும், பல நேரங்களில் கண்டனங்களும் பெற்ற ஓவியர் Maqbool Fida Hussain, இந்தியாவின் தலை சிறந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் என்ற விருதைப் பெற்றவர்.
‘இந்தியாவின் பிகாசோ’ என்று அழைக்கப்பட்ட இவரது ஒரு சில ஓவியங்கள் இந்து மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதால், இவர் எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, இவர் தன் இறுதி நாட்களை Qatar நாட்டில் செலவிட்டார். இவர் இலண்டனில் இவ்வியாழன் காலையில் தன் 95வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
அதிகப் புகழும் முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட ஒரு தலைசிறந்த ஓவியரை இந்தியா இழந்துவிட்டதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
Hussain தன் ஓவியங்களால் பலரைக் கவர்ந்தவர் என்று கூறிய மனித உரிமை ஆர்வலரான இயேசு சபைக் குரு Cedric Prakash, இவர் தன் இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ முடியாமல் போனது நம் நாடு மத சார்பற்ற நாடு என்பதற்கு ஒரு பெரும் களங்கமாய் உள்ளதென்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.