தமிழகத்தின் மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் திருத்தந்தை திருப்பீடத்தில்
சந்தித்தார்
ஜூன் 09,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து
உரோம் நகர் வந்துள்ள மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில்
சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத்
திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வியாழன காலை தமிழக ஆயர்களின் 'அட்
லிமினா' சந்திப்பைத் துவக்கும் முதல்கட்டமாக, மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும்
சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார். சென்னை மயிலைப்
பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்களை, துணை ஆயர் இலாரன்ஸ் பயஸுடன் முதலில் சந்தித்து
உரையாடிய திருத்தந்தை, பின்னர் மதுரைப் பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்களையும், பாண்டிச்சேரி
கடலூர் பேராயர் அன்டனி அனந்தராயர் அவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து, அந்தந்த மறைமாவட்டங்கள்
குறித்து அவர்களுடன் உரையாடினார்.