ஜூன் 07, 2011. அரசுத் துருப்புகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்கள்
இடம்பெற்று வரும் சிரியாவில், நாட்டின் ஒற்றுமைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு
விடுத்துள்ளனர் அந்நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினர். எண்ணற்றோரின் உயிரிழப்புகளுக்குக்
காரணமாகியுள்ள அண்மை பதட்ட நிலைகளை முடிவுக்குக் கொண்டுவர சிரியாவின் அனைத்துத் தரப்பினரும்
நாடு தழுவிய அளவில் மனம் திறந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்
இயேசு சபைக் குருக்கள். ஒவ்வொருவரும் வன்முறையைக் கைவிடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள
சிரிய இயேசு சபையினர், ஒவ்வொரு மனிதனின் மாண்பும் மதிக்கப்படவேண்டும் என இராணுவத்தினருக்கும்
காவல்துறையினருக்கும் விண்ணப்பித்துள்ளனர். சிரிய நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரின்
விண்ணப்பம் தாங்கிய இந்த அறிக்கை அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.