2011-06-03 15:38:10

யாழ்ப்பணத்தில் கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள்


ஜூன் 03,2011. இலங்கை யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு பங்குத் தளத்தில் கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருநகர் எனுமிடத்தில் உள்ள புனித ஜேம்ஸ் பங்கைச் சேர்ந்த குருக்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழுவொன்று வீடு வீடாகச் சென்று, மக்களின் பிரச்சனைகளைக் கேட்டு, அவர்களை கோவிலுக்கு வரும்படித் தூண்டி வருகின்றது.
உள்நாட்டுப் போர் முடிந்து இரு ஆண்டுகள் ஆகியும், 5000 பேர் கொண்ட புனித ஜேம்ஸ் பங்கில் கோவிலுக்கு வரும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக இக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கண்டியில் உள்ள ஒரு கத்தோலிக்க இளையோர் குழுவினர் இக்குழுவில் இன்னும் அதிகமான இளையோரைச் சேர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி மறைமாவட்டத்தில் 85,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும் இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் இளையோர் என்றும் கத்தோலிக்க இளையோர் குழுவின் அங்கத்தினர்கள் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.