2011-06-02 13:08:38

ஒப்புரவிற்கானத் தேவையை வலியுறுத்துகிறார் பெரு நாட்டின் கர்தினால்


ஜூன் 02,2011. வரும் ஞாயிறன்று பெரு நாட்டில் இடம்பெற உள்ள அரசுத்தலைவருக்கான இறுதிக்கட்டப் போட்டியில் வன்முறைகள் கைவிடப்பட்டு, ஒப்புரவு குறித்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு கர்தினால் ஹுவான் லூயிஸ் சிப்ரியானி.
வன்முறைகள் மூலம் எப்பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு, சுதந்திரமாக வாக்களிப்பதுடன், மற்றவர்களின் கருத்துக்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என தன் அறிக்கையில் கூறியுள்ளார் லீமா நகர் பேராயர் கர்தினால் சிப்ரியானி.
ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையில் நாம் கைக்கொள்ளவேண்டியது வன்முறையோ பகைமையோ அல்ல, மாறாக அமைதியும் சகிப்புத்தன்மையுமே என்று கர்தினால் சிப்ரியானி வலியுறுத்தினார்.
மதத்தின் பெயரால் வன்முறைகள் நியாயப்படுத்தப்பட முடியாது என்ற கர்தினால், நாட்டின் ஒப்புரவிற்கான முயற்சிகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.