2011-06-02 13:08:49

இஞ்ஞாயிறைப் 'பசுமை ஞாயிறாக'ச் சிறப்பிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்


ஜூன் 02,2011. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, இஞ்ஞாயிறை இந்தியக் கிறிஸ்தவர்கள் 'பசுமை ஞாயிறாக'ச் சிறப்பிக்க வேண்டும் என இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை அழைப்பு விடுத்துள்ளது.
ஜூன் 5ம் தேதி, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலகச் சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டங்களின் போது, சிறப்புச் செப வழிபாடுகள், போதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவேண்டும் என அவ்வவையின் அறிக்கை அழைப்பு விடுக்கின்றது.
'காடுகள்: உங்களுக்கானச் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் நாளின் போது, விளக்குகள் ஏந்திய செப வழிபாடுகள், விழிப்புணர்வுக் கட்டுரை விநியோகம், கண்காட்சிகள் போன்றவை கிறிஸ்தவசபைகளால் நடத்தப்படும் என்றார் தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர் கிறிஸ்டோபர் ராஜ்குமார்.








All the contents on this site are copyrighted ©.