2011-06-01 16:09:37

குவஹாட்டிப் பேராயர் தாமஸ் மேனம்பரம்பிலை அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இத்தாலிய இதழ் பரிந்துரை


ஜூன் 01,2011. இந்தியப் பேராயர் ஒருவர் அமைதிக்கான நொபெல் பரிசு பெற தகுதியுடையவர் என்று இத்தாலிய இதழ் ஒன்று பரிந்துரைத்துள்ளது.
Il Bollettino Salesiano என்ற சலேசிய இதழின் ஜூன் மாதப் பதிப்பில் குவஹாட்டியின் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்களை அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இந்த இதழ் பரிந்துரைத்துள்ளது.
74 வயதான பேராயர் மேனம்பரம்பில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்குப் பகுதியில் அமைதியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருச்சபைத் தலைவர்களும், இன்னும் பிற முக்கியத் தலைவர்களும் இணைந்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணும் முயற்சிகளில் ஈடுபடும்போது, இறைவார்த்தையின் சக்தி மக்கள் மத்தியில் இன்னும் தெளிவான முறையில் வெளிப்படுவதை உணர முடிகிறது என்று பேராயர் UCANக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
வடகிழக்கு இந்திய ஆயர் பேரவையின் தலைவராக உள்ள பேராயர் மேனம்பரம்பில், ஆசிய ஆயர்கள் பேரவையின் நற்செய்தி பணிக்குழுவின் தலைவராகவும், இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவின் தலைவராகவும் பணிபுரிகின்றார்.








All the contents on this site are copyrighted ©.