2011-05-31 15:50:36

தேவ அழைத்தலுக்கான 60 மணி நேர திருநற்கருணை ஆராதனை வழிபாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.


மே 31, 2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் அறுபதாம் ஆண்டு நிறைவு இந்த ஜூன் மாதம் 29ந்தேதி இடம்பெற உள்ளதை முன்னிட்டு உலகக் கத்தோலிக்கர்கள் அனைவரும், தேவ அழைத்தலுக்கான 60 மணி நேர திருநற்கருணை ஆராதனை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் ஜூன் மாதம் முழுவதும் திருநற்கருணை முன் தேவ அழைத்தலுக்கென செபவழிபாடுகள் இடம்பெறும் எனவும், அது இயேசுவின் திரு இதய விழாவும் குருக்களுக்கான உலக செப நாளுமான ஜூலை முதல் தேதி நிறைவுக்கு வரும் எனவும் ஆயர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் எடுத்துக்காட்டு மற்றும் பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குருக்களுக்காகவும் தேவ அழைத்தலுக்காகவும் செபிப்பதாகவும் ஜூன் மாத ஆன்மீகக் கொண்டாட்டங்கள் இருக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.