2011-05-31 15:55:30

கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது பிஜேபி அரசு.


மே 31, 2011. கர்நாடகாவின் சிறுபான்மைக் கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அம்மாநிலத்தின் பிஜேபி அரசு.
கிறிஸ்தவச் சபைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 15 கோடியை ஒதுக்குவதாக உரைக்கும் கர்நாடக அரசு, கிறிஸ்தவர்களுக்கானச் சமூக மையங்கள் கட்டுவதற்கும், ஏழை மாணவர்களுக்கான நிதியுதவிகளுக்கும், கிறிஸ்தவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கும் என 35 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறது.
2011-2012ம் ஆண்டிற்கான மாநில நிதித்திட்டத்தில் 50 கோடியைக் கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்கென கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளதென செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.