2011-05-28 14:45:23

வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை இயேசு சபை குரு விடுதலை


மே 28, 2011. வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை துருப்புகளால் கைது செய்யப்பட்ட இயேசு சபை குரு ஒருவரும் ஐந்து தமிழர்களும் நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக இயேசு சபை குரு பால் சத்குணநாயகம் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இவ்வாரமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றமற்றவர் என ஏனைய ஐந்து தமிழர்களுடன் இணைந்து விடுவிக்கப்பட்டுள்ள குரு சத்குணநாயகம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயின்று உளயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று மட்டக்களப்புவின் அரசு சாரா அமைப்பின் மையத்தில் மக்களுக்கான உளவியல் ஆலோசகராகச் செயலாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.