2011-05-28 14:42:57

உலக இளையோர் தினத்தின் பலன்களை உடனே காண முடிகிறது என்கிறார் இஸ்பெயின் கர்தினால்


மே 28, 2011. வருங்கால வாழ்வனைத்தையும் தங்கள் முன்னே வைத்திருக்கும் இளையோர் அந்த வாழ்வுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதே கத்தோலிக்கத் திருச்சபையின் உலக இளையோர் தினம் என்றார் கர்தினால் அந்தோனியோ மரிய ருவோக்கோ வலேரா.
வரும் ஆகஸ்ட் மாதத்தின் உலக இளையோர் தினம் திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இஸ்பெயினின் மத்ரித் நகர் பேராயர் கர்தினால் ருவோக்கோ வலேரா, உலக இளையோர் தினத்தின் பலன்கள் ஒவ்வொருமுறையும் குருத்துவ, துறவற மற்றும் திருமணத்திற்கான அழைப்பாக மலர்வதைக் காண முடிகிறது என்றார்.
கத்தோலிக்க இளையோர் தினக்கொண்டாட்டங்கள், சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை இளையோர் வழி வழங்கி வருகின்றன என மேலும் கூறினார் இஸ்பெயின் கர்தினால்.








All the contents on this site are copyrighted ©.