உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
மே 28, 2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர்
வந்துள்ள கேரளாவைச் சேர்ந்த ஐந்து ஆயர்களை இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து
உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில்
சந்தித்து வரும் திருத்தந்தை, இச்சனிக்கிழமை காலை மேலும் ஐந்து இந்தியத் திருச்சபைத்
தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார். கேரளாவின்
கொல்லம் ஆயர் ஸ்டான்லி ரோமன், புனலூர் ஆயர் சில்வெஸ்டர் பொன்னுமுத்தன், நெய்யாற்றிங்கரா
ஆயர் வின்சென்ட் சாமுவேல், ஆலப்புழா ஆயர் ஸ்டீபன் அத்திப்பொழியில், விஜயபுரம் ஆயர் செபஸ்தியான்
தெக்கத்தேசேரில் ஆகியோரை குழுவாகவும், பின்னர் தனித்தனியாகவும் சந்தித்து அந்தந்த மறைமாவட்டங்கள்
குறித்து அவர்களுடன் உரையாடினார் திருத்தந்தை.