2011-05-26 15:49:12

திருத்தந்தைக்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் பரிசாக அளித்த மகுடம்


மே 26,2011. ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் சார்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டுக்கு இப்புதனன்று மகுடம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
இம்மகுடத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பேற்றிருந்த Dieter Philippi என்பவர் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் இம்மகுடத்தை அளித்தார்.
14ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை திருத்தந்தையாக இருந்த அனைவரும் பதிவியேற்ற அன்று மகுடம் அணிந்து வந்தனர். 1963ம் ஆண்டு திருத்தந்தையாகப் பதவியேற்ற ஆறாம் பவுல் மகுடம் அணிந்து பதவியேற்ற கடைசித் திருத்தந்தை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான் பால் மகுடத்திற்குப் பதிலாக, கழுத்துப் பட்டை ஒன்றை அணியும் பழக்கத்தை உருவாக்கினார்.
இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகிய இரு திருத்தந்தையரும் மகுடம் அணியாமல் பதவியேற்றனர்.
எனினும் இரண்டாம் ஜான் பாலுக்கு ஹங்கேரி நாட்டு கத்தோலிக்கர்கள் 1981ம் ஆண்டு மகுடம் ஒன்றைப் பரிசளித்தனர். அம்மகுடத்தைத் தயாரித்த நிறுவனம் தற்போது 16ம் பெனடிக்டுக்கு வழங்கப்பட்ட மகுடத்தையும் தயாரித்தது என்று Dieter Philippi செய்தியாளர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.