உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
மே 26, 2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம்
நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆறு ஆயர்கள் மற்றும் கேரளாவின் வேராப்பொளி பேராயரை இவ்வியாழனன்று
காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த சில
வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வியாழன்
காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள்
குறித்து உரையாடினார். கேரளாவின் வேராப்பொளி பேராயர் பிரான்சிஸ் கல்லறக்கல்லை முதலில்
தனியாகச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, ஆந்திராவின் கடப்பா ஆயர் பிரசாத் கலேலா, கம்மம்
ஆயர் பால் மைப்பான், கர்நூல் ஆயர் அந்தொனி பூலா, நலகொண்டா ஆயர் ஜோஜி கோவிந்து, குண்டூர்
ஆயர் பாலி காலி, நெல்லூர் ஆயர் மோசஸ் தொரபொய்னா பிரகாசம் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து,
அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து அவர்களுடன் உரையாடினார்.