2011-05-24 14:04:30

1. குடும்பங்களுக்கான ஏழாவது உலக கருத்தரங்கிற்கு உதவும் வழிகாட்டுதல் ஏட்டை வெளியிட்டது திருப்பீடம்


மே 24, 2011. வரும் ஆண்டு மேமாதம் 30 முதல் ஜூன் 3ந் தேதி வரை இத்தாலியின் மிலானில் இடம் பெற உள்ள குடும்பங்களுக்கான ஏழாவது உலக கருத்தரங்கிற்கு உதவும் நோக்கிலான வழிகாட்டுதல் ஏட்டை இச்செவ்வாயன்று வெளியிட்டது திருப்பீடம்.
குடும்பங்களுக்கான திருப்பீட அவை 'குடும்பம் : பணியும் கொண்டாட்டமும்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வேடு, இக்கருத்தரங்கிற்குக் குடும்பங்களைத் தயாரிப்பதற்கு உதவும் மறைக்கல்வி ஏடாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடப் பத்திரிகைத்துறை அலுவலகத்தில் இவ்வேடு வெளியிடப்பட்ட நிகழ்வில் குடும்பங்களுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, மிலான் பேராயர் கர்தினால் Dionigi Tettamanzi, மிலான் துணை ஆயர் Franco Giulio Brambilla ஆகியோர் உட்பட ஐவர் உரை நிகழ்த்தினர்.








All the contents on this site are copyrighted ©.