இலங்கையில் போருக்கு பிறகும் மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை
மே 21, 2011. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும்,
போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில்
இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுவதாக Asia News செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. இலங்கைத்
தமிழர்களிடையே வேலைவாய்ப்பற்ற நிலைகள் அதிகமாகக் காணப்படுவதாகவும், இதனால் ஏறத்தாழ 48
பேர் தற்கொலை புரிந்துள்ளதாகவும் இச்செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அரசு
ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர்
நீதிமன்றத்தின் வழியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான
மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.