இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நாளின் நினைவு
மே 20,2011. 26 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப் போர் 2009ம்
ஆண்டு மேமாதம் 19ம் தேதி முடிவுக்கு வந்ததென்று அரசு அறிவித்த அந்த நாளை யாழ்ப்பாணப்
பகுதியில் வாழ்ந்து வரும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இப்புதனன்று நினைவு கூர்ந்தனர். யாழ்ப்பாணத்தின்
மரியன்னைப் பேராலயத்தில் இந்நாளையொட்டி சிறப்புச் செப வழிபாடுகளும், திருப்பலியும் நிகழ்த்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தின் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் இந்தச் சிறப்புத் திருப்பலியில் ஐந்து குரு
மாணவர்களைக் குருவாகத் திருநிலைப்படுத்தினார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் இறந்தோர்,
மற்றும் உடல் ஊனமுற்றோர், காயமுற்றோர் அனைவரையும் ஆயர் சவுந்தரநாயகம் இத்திருப்பலியில்
சிறப்பாக நினைவுகூர்ந்தார்.யாழ்ப்பாணம், வவுனியா, கிள்ளிநொச்சி ஆகிய மூன்று நகரங்கள்
இந்த போரின் அதிகப்படியான இழப்புக்களைச் சந்தித்துள்ளது என்றும், அந்நகரங்களில் ஏறத்தாழ
ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.