2011-05-18 16:06:33

இந்தியாவில் ஊழலை எதிர்த்துப் போராட இயேசு சபையினர் முன்வர வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி


மே 18,2011. இந்தியாவில் நிலவும் அநீதிகளையும், ஊழலையும் எதிர்த்துப் போராட இயேசு சபையினர் முன்வர வேண்டுமென்று இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
கேரள மாநில இயேசு சபையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீகார்யம் லொயோலா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சிரியக் ஜோசப், இயேசு சபையினர் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய முக்கியப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
இயேசு சபையினரிடம் தான் பெற்ற கல்வியைப் பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்த நீதிபதி சிரியக் ஜோசப், கத்தோலிக்கத் திருச்சபை சமூகப்பணிகளில் புது முயற்சிகளை மேற்கொள்வதற்கு இயேசு சபையினர் எப்போதும் தங்கள் முழு ஆதரவை வழங்கி வந்திருப்பதைப் பாராட்டினார்.இந்திய இளையோருக்கு, அதிலும் சிறப்பாக வறுமைச் சூழ்நிலையில் இருந்து வரும் இளையோருக்கு பல வழிகளிலும் கல்விப் பணிகள் செய்து வரும் இயேசு சபையினர், இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க இன்னும் பல வழிகளில் போராட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.