செபம் குறித்த திருத்தந்தையின் புதன் உரைகள் மக்களைக் கவர்ந்துள்ளன
மே 16, 2011. கடவுள் சார்பற்ற கொள்கைகளாலும் உலகாயுதப் போக்குகளாலும் கவரப்பட்டிருக்கும்
இன்றைய உலகில், புதன் பொதுமறைபோதகங்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செபம் குறித்து
தொடர் உரையாற்றி வருவது மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாகக் கூறினார் திருப்பீடத்தின்
அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி. கிறிஸ்தவர்கள் பெரும்பாலும்
ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட செபங்களையே சார்ந்து நிற்கிறார்கள், இதயத்தினுள் ஆழமாகச் சென்று
இறைவனின் முன்னிலையில் நம் இதயத்தில் உள்ளவைகளை முன் வைப்பது அரிதாகி வருகின்றது என்பதையும்
எடுத்துரைத்தார் குரு லொம்பார்தி. இறைவன் மறைபொருளானவர் என்பதை ஏற்றுக்கொண்டு அவருக்கான
நம் தாகத்தையும், அன்பு, ஒளி மற்றும் உண்மைக்கான ஆவலையும் ஒன்றிணைக்கும்போது நாம் இறைவனை
நோக்கி மிக நெருங்கிச் செல்கிறோம் என மேலும் கூறினார் திருப்பீடப்பேச்சாளர்.