மக்களுக்கானப் பணிகளில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பிலிப்பீன்ஸ்
தலத்திருச்சபை ஆர்வம்
மே 14, 2011. மக்களுக்கான மருத்துவ உதவிகள் மற்றும் பிறரன்புப் பணிகளில் அரசு மற்றும்
தனியார் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக அறிவித்துள்ளது பிலிப்பீன்ஸ்
தலத்திருச்சபை. நாட்டின் நலப்பணிகளில் மேலும் உயிர்துடிப்புடைய பங்கேற்பை எடுப்பதில்
ஆர்வமாக இருப்பதாக உரைக்கும் நல ஆதரவுக்கான பிலிப்பீன்ஸ் ஆயர்களின் அவை, இதற்கென ஏனைய
அனைத்து ஒத்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள்,
நோயாளிகள், முதியோர் மற்றும் இறக்கும் தறுவாயில் இருப்போருடன் பணியாற்றிவரும் தனியார்
அமைப்புகளை ஏற்கனவே தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை
வெளியிட்டுள்ளதாகவும் கூறினார் நல ஆதரவுக்கான பிலிப்பீன்ஸ் ஆயர் அவையின் உயர் இயக்குனர்
குரு மர்ச்செல்லோ பமிந்துவான்.