2011-05-14 16:43:37

பிரிட்டன் கத்தோலிக்கரிடையே புலால் உணவற்ற வெள்ளிக்கிழமைகள் மீண்டும் அமுலுக்கு வருகின்றன


மே 14,2011. சிலுவையில் தொங்கிய கிறிஸ்துவுடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை தோறும் அசைவ உணவுவகைகளைக் கைவிடும் பழக்கத்தைக் கத்தோலிக்கர்கள் மீண்டும் கொணரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்.
அண்மையில் முடிவுற்ற அவர்களின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் இதை அறிவித்த ஆயர்கள், இவ்வாண்டு செப்டம்பர் 16ந்தேதி முதல் இப்பழக்கம் அமுலுக்கும் வரும் எனவும் தெரிவித்தனர்.
இயேசு கிறிஸ்துவின் இறப்பு நாளான வெள்ளியன்று ஏதாவது ஒரு வகையில் உண்ணாநோன்பு அல்லது ஒறுத்தல் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என திருச்சபை எதிர்பார்க்கிறது என்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள், கத்தோலிக்க தனித்தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, வெள்ளிக்கிழமைகளில் காய்கறி உணவை உண்ணும் பழங்காலப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.