கவியோகி, மகரிஷி என்றழைக்கப்படும் சுத்தானந்த பாரதியார் 1897ம் ஆண்டு மே 11ம் தேதி தமிழ்
நாடு, சிவகெங்கையில் பிறந்தார். (மறைவு - மார்ச் 7, 1990) இவர் ஆசிரியராகப் பணியாற்றிக்
கொண்டிருந்த போது, கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப்
பல நூல்களை இயற்றினார். இந்தியா சுதந்திரம் பெறும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்
ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தார். அப்போது அவர் "பாரத சக்தி மகாகாவியம்" என்ற
அற்புதப் படைப்பை தமிழ் உலகிற்கு அளித்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை,
சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1968ம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம்
தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது. இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி,
மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. 1980ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்
கவியோகி கலந்து கொண்டு, தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, "காதொளிரும் குண்டலமும் கைக்கு
வளையாபதியும்.." எனும் பாட்டை பாடினார். 1984ம் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும்
நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு)
பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி.
தமிழ்த்தாய் வாழ்த்து (5 பெரும் காப்பியங்களை
ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய பாடல்)
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை -யாபதியும்,கருணை
மார்பின் மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில் மேகலையும், சிலம்பார் இன்பப் போதொளிர்பூந்
தாமரையும், பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூடி, நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்கு
தமிழ் நீடு வாழ்க ! நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார் மொழியிருக்கச் சேக்கி ழாரின் பால்வடிசெந்
தமிழிருக்கக் கம்பச்சித் திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார் குறளிருக்க,
நமது நற்றாய், காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்கனிபெருகக் கண்டி லோமோ !