நற்செய்தி அறிவிப்புக்கான மிகப்பெரும் சக்தியாக உலக இளைஞர் தினம் உள்ளது.
மே 10, 2011. இயேசு கிறிஸ்துவுடனான உண்மையான, ஆழமான, மகிழ்ச்சி நிறை சந்திப்பு இடம்பெற
உள்ள உலக இளையோர் தினக்கொண்டாட்ட தயாரிப்புகள் மத்ரித்தில் சிறப்பான விதத்தில் இடம்பெற்று
வருவதாக அறிவித்தார் இஸ்பெயின் கர்தினால் Antonio Rouco Varela. ஆகஸ்ட் 16 முதல் 21
வரை இடம்பெறவுள்ள உலக இளையோர் தினத்திற்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், அது குறித்து
செய்தி வெளியிட்ட கர்தினால், இதயங்கள் புதுப்பிக்கப்பட வாய்ப்பு நல்கும் இக்கொண்டாட்டங்கள்,
திருச்சபைக்கும் இளையோர் சமுதாயத்திற்கும் மிகுந்த பலன் தரும் காலமாக இருக்கும் என்றார். அருளாளர்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலால் மேய்ப்புப்பணி சார்ந்த திட்டமாகத் துவக்கப்பட்ட இளையோர்
தின கொண்டாட்டங்கள் தற்போது நற்செய்தி அறிவிப்பிற்கான மிகப்பெரும் சக்தியாக மாறியுள்ளது
குறித்தும் மகிழ்ச்சியை வெளியிட்டார் கர்தினால் Varela. இஸ்பெயினில் இவ்வாண்டு இடம்பெறும்
இளைஞர் தினக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இதுவரை 170 நாடுகளைச் சேர்ந்த மூன்று இலட்சத்து
நாற்பதாயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்துள்ளனர்.