2011-05-07 15:24:32

ஐவரி கோஸ்டில் இடம் பெற்ற கடும் சண்டை ஏழைகளை மேலும் ஏழைகளாக்கியிருக்கின்றது


மே07,2011. ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் நான்கு வாரங்களாக இடம் பெற்ற கடும் சண்டைக்குப் பின்னர் தற்போது அமைதி திரும்பியிருந்தாலும், சச்சரவு செய்பவர்கள் இன்னும் தங்கள் செயல்களை நிறுத்தவில்லை என்று திருக்குடும்ப சபை அருள்சகோதரி ரொசாரியா தெரிவித்தார்.
இந்த நிலைமை உடனடியாக மாற்றக்கூடியது அல்ல என்றுரைத்த அச்சகோதரி, கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நான்கு வாரங்களாக இடம் பெற்ற கடும் மோதல்களில் காயம்பட்டவர்களின் உடல்களிலிருந்து எத்தனை குண்டுகளை அகற்றினேன் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை என்றார்.
இந்த நான்கு வாரப் போரானது ஏழைகளை மேலும் ஏழைகளாக்கியிருக்கின்றது என்ற அவர், ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை அயராது வேலை செய்தோம், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளித்தோம் என்றார்







All the contents on this site are copyrighted ©.