2011-05-06 16:42:40

திருத்தந்தையின் வெனிஸ் நகருக்கானத் திருப்பயணம்


மே06,2011. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை மூன்று மணிக்கு இத்தாலியின் அக்குய்லேயா, மெஸ்த்ரே, வெனிஸ் ஆகிய நகரங்களுக்கானத் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தைத் தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சனிக்கிழமை மாலை அக்குய்லேயா நகர் வளாகத்தில் நகர மக்களைச் சந்தித்தல், அந்நகர் பசிலிக்காவில் விசுவாசிகளுக்கு உரையாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து அன்று மாலையே வெனிஸ் செல்வார் திருத்தந்தை.
அன்று வெனிஸ் புனித மாற்கு வளாகத்தில் மக்களைச் சந்தித்தல், பின்னர் ஞாயிறு காலை மெஸ்த்ரே புனித ஜூலியானோ பூங்காவில் திருப்பலி, புனித மாற்கு பசிலிக்காவில் வெனிஸ் மறைமாவட்ட மன்ற நிறைவு ஆகிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை.
திருத்தந்தையர் பத்தாம் பத்திநாதர், அருளாளர் 23ம் ஜான், முதலாம் ஜான் பால் ஆகியோர் வெனிஸ் மறைமாவட்ட முதுபெரும் தந்தையராய் இருந்த போது பாப்பிறைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மேலும், திருத்தந்தையர் 12ம் கிரகரி, 4ம் யூஜின், 2ம் பவுல், 7ம் அலெக்சாண்டர், 8ம் கிளமென்ட் ஆகியோர் வெனிஸ் நகரைச் சேர்ந்தவர்கள்







All the contents on this site are copyrighted ©.