சாதீய அமைப்பு முறைக்குத் தகுந்ததொரு பதில் அளிக்கும் கடமை இந்தியத் திருச்சபைக்கு
உள்ளது
மே 05,2011. காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சாதீய அமைப்பு முறைக்குத் தகுந்ததொரு
பதில் அளிக்கும் கடமை இந்தியத் திருச்சபைக்கும், ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கும் உள்ளதென்று
கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர். World Council of Churches (WCC) என்ற அமைப்பால்
"சாதி, மதம், பண்பாடு" என்ற தலைப்பில் கடந்த ஞாயிறு முதல் புதன் வரை கேரளாவின் கொச்சியில்
நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள 2,80,00000
கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும், அவர்கள் சமுதாயத்திலும்,
கிறிஸ்தவ அமைப்புக்களிலும் மேற்குடியினரின் அடக்கு முறைகளை உணர வேண்டியுள்ளதென்று இக்கருத்தரங்கில்
பேசப்பட்டது.அண்மைக் காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
ஒரு நல்ல அடையாளம் எனினும், இந்த அடையாளங்கள் கிறிஸ்தவ சபைகளின் மத்தியில் செயல்பாட்டு
வடிவம் பெற வேண்டியது அவசியம் என்று இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.