2011-05-03 16:20:03

வலைத்தளத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடும் உயிர்த்துடிப்புமிக்க கத்தோலிக்க பிளாக்கர்கள் திருச்சபைக்குத் தேவை - வத்திக்கான் அதிகாரி


மே03,2011. வலைத்தளத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடும் உயிர்த்துடிப்புமிக்க கத்தோலிக்க பிளாக்கர்கள் (bloggers) திருச்சபைக்குத் தேவைப்படுகிறார்கள் என்று வத்திக்கான் கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.
திருப்பீட கலாச்சார அவையும் சமூகத் தொடர்பு அவையும் இணைந்து இத்திங்களன்று வத்திக்கானில் நடத்திய பிளாக்கர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட 150 பிரதிநிதிகள் இவ்வாறு கூறினர்.
பிளாக்கர்கள், நவீனச் சமூகத்தொடர்புச் சாதனங்களில் திருச்சபையின் வாழ்வுக்கு வழங்கி வரும் நற்செயல்களை அங்கீகரிக்கவும் அத்துடன் பிளாக்கர்களுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடலைத் தொடங்கும் நோக்கத்திற்காகவும் இக்கூட்டம் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருச்சபையின் உறுப்பினர்களை உருவாக்குவதிலும் அவர்களுக்குத் தகவல்களைக் கொடுப்பதிலும் பிளாக்கர்கள் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.